Sports
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி - காரணம் என்ன?
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 297 குவித்திருந்தது. இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார். மேலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு பதிலாக ரஹானே இந்திய அணியை வழி நடத்தினார். மேலும், விராட் கோலி பேட்டிங் செய்யவும் வரவில்லை. இதனால் கோலிக்கு என்னாயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தின்போது விராட் கோலி விரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.
மேலும், பயிற்சி போட்டியில் விளையாடி காயம் பெரிதானால், டெஸ்ட் தொடரில் கோலி விளையாடுவது சிக்கலாகி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் இந்த பயிற்சி போட்டியில் விளையாடவில்லை என்றும் நேரடியாக டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பார் என்று இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!