Sports
குருவை மிஞ்சிய சிஷ்யன் - நேற்றைய போட்டியில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் !
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அதேபோல் பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்திய அணி 27 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த் 65 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 65 ரன்கள் அடித்ததன் மூலம் T20 போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்கள் அடித்திருந்த தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார். முன்னதாக தோனி 2017ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 56 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை(08.07.2019) தொடங்குகிறது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !