Sports
“ஏன் அப்படி செய்தீர்கள்?” : பி.சி.சி.ஐ கேள்வியால் சிக்கலில் ரவி சாஸ்திரி & கோலி!
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் தோல்விக்கு ரசிகர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதில், அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது ஏன், தோனி ஏன் அரையிறுதியில் 7வது வீரராக களமிறக்கப்பட்டார், அணியில் ஏன் 3 விக்கெட் கீப்பர்கள் என 3 முக்கிய கேள்விகளை பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு முன்வைத்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் இந்திய அணியின் கேப்டன் கோலி இருவரும் விளக்கமளிக்க பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியினர் இங்கிலாந்திலிருந்து ஞாயிறன்று புறப்படுகிறார்கள். அதன்பின்னர் பி.சி.சி.ஐ-யின் கேள்விக்கு கோலியும், ரவி சாஸ்திரியும் பதிலளிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்தியாவின் தோல்விக்குப் பிறகு அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!