Sports
உலகக் கோப்பை 2019: முதல் பந்திலேயே வரலாறு படைத்தார் இம்ரான் தாஹிர்!
உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார் தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர்.
இங்கிலாந்து உடனான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில், தொடரின் முதல் பந்தை வீசிய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுக்கு உரியவராகியுள்ளார் இம்ரான் தாஹிர்.
1975-ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பை தொடரின் முதல் பந்தை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் மதன்லால் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பந்தை வீசி வரலாறு படைத்த கையோடு இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து வீரர் பார்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார் தாஹிர். பிறகு என்ன சாதனைக்கும் விக்கெட்டுக்கும் சேர்த்து தனது ஸ்டைலில் மைதானத்தை வட்டமடித்து கொண்டாடினார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!