Sports
ஐ.பி.எல் 2019 ; ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி
ஐ.பி.எல் லின் 12 வது சீசன் கடந்த 23 அம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த எட்டாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து தோல்வியடைந்தது. இந்நிலையில் இதில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.சிறிது நேரத்திலே ஜாஸ் பட்லர் ரஷீத் கான் பந்தில் அவுட்டானார்.இதையடுத்து இணைந்த கேப்டன் ரகானே (70), சாம்சன் (102*) ஆகியோரின் அதிரடியால் , அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது.
199 என்ற கடின இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு, வார்னர் (69), பேர்ஸ்டோவ் (45) அதிரடி துவக்கம் தந்தனர்.இந்த ஜோடி முதல் விகேட்க்கு 110 ரன்கள் சேர்த்தது.பின் வந்த கேப்டன் வில்லியம்சன் (14) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த விஜய் சங்கர் (35) ஓரளவு கைகொடுத்தார். மனிஷ் பாண்டே 1 ரன்னுக்கு அவுட்டானார்.
கடைசி நேரத்தில் யூசுப் பதான் அதிரடி காட்ட, ஹைதராபாத் அணி வெற்றிக்கு 12 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் ஆர்சர் வீசிய 19வது ஓவரில் ரசித் கான் தலா 1 பவுண்டரி, 1 சிக்சர் விளாச, ஹைதராபாத் அணி, 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்ய பட்டார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!