Politics
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் நிதிகளை நிறுத்தி வைப்பது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை சூரையாடுவது போன்ற பல்வேறு முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமை நிகராளியான பிரதமர் மோடி, தேர்தலுக்காக மட்டுமே தமிழ்நாட்டில் தலைகாட்டி வருகிறார்.
பிரதமர் மோடியின் தேர்தல் கால வருகைகள் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மாற்றாது என அறிந்தும், தனது அரசியல் ஆதாயத்திற்காக மீண்டும் தமிழ்நாடு வர இருக்கிறார் அவர்.
அதிலும், குறிப்பாக விவசாயிகளுக்கு தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்துவிட்டு, தற்போது விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார் பிரதமர் மோடி.
இதனைக் கண்டித்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
“விதைகள் மசோதா 2025, மின்சார மசோதா 2025, இரண்டையும் வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக்க திட்டமிட்டுள்ளது மோடி கூட்டம்.
விதைகள் சட்டம் என்பது விவசாயிகளின் தனி உரிமை, பண்பாட்டின் அடையாளம், அதை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்க்கவும் விதை விலையை தாறுமாறாக உயர்த்துவதன் மூலம் விவசாய உற்பத்தி செலவை அதிகரிக்கவும் தான்.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் என்பது நடைமுறையில் இருக்கிறது. இதை ஒழித்துக் கட்டி அபரிமிதமான கட்டணம் தீர்மானிக்கவும் மின்துறையை தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க வழி செய்வதுதான் மின்சார சட்டம் 2025.
இப்படி விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை தொடர்ந்து செய்து வரும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார்.
அவரை வரவேற்க வர வேண்டும் என்று இங்கு சில கைக்கூலிகள் அழைப்பு வேறு விடுக்கிறார்கள். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.”
Also Read
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!
-
என் மானத்தை வாங்காதீங்க: வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ்: Entertainment-காக மூன்று அணிகளாக பிரிந்த BB வீடு!
-
“பணிநியமனம் மற்றும் பதவி உயர்வால் 4.5 ஆண்டுகளில் 1 இலட்சம் பேர் பயன்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!