Politics
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
2024 தேர்தல் நேரத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாஜக மற்றும் அதன் தலைவர்களை குறிப்பிட்டு விமர்சித்தார். இது குறித்து தெலுங்கானா மாநில பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் அளவு புகாரில் எதுவும் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து இதனை எதிர்த்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பீ.ஆர்.கவாய் அமர்வு பாஜக நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்கு பயன்படுத்துவதற்கு எச்சரிக்கை விடுத்தது.
மேலும், அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம் என்று கூறிய அவர், நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்தால் விமர்சனங்களை எல்லாம் தாங்கிக் கொள்ளும் வலிமையான திறமை உங்களிடம் இருக்க வேண்டும் என்று கூறி பாஜக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Also Read
-
தஞ்சை முதல் தூத்துக்குடி வரை.. முதலமைச்சரின் 4-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் விவரம் உள்ளே!
-
”அநாகரிக அரசியல் செய்யும் பழனிசாமி.. 10 தோல்வி அல்ல 11வதும் தோல்விதான்”: ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!
-
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் அன்பில்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
’Morning ride in Chennai Metro!’ : மக்களோடு மக்களாக - சென்னை மெட்ரோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
FCRA எனும் பாஜக-வின் கொடுங்கோல் சட்டம்.. தேசப் பாதுகாப்பைப் பற்றி யார் பேசுவது?: முரசொலி கடும் விமர்சனம்!