Politics
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்... இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே !
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை சபாநாயகராகவும் திகழ்ந்து வந்த நிலையில், அவர் மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இது அரசியல் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். சுதர்சன் ரெட்டிக்கு இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "சிறந்த மனிதரை வேட்பாளராக அறிவித்துள்ளோம். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு, ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி அவர்களை குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!