Politics
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் தேர்தலில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், முதல் முறையாக ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் கொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதுவரை 25 தலைமை தேர்தல் ஆணையர்கள் பணியாற்றி உள்ள நிலையில், முதல் முறையாக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை இழந்து இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை எதிர்கொள்ள உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
தற்போதைய தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் தொடங்கியுள்ளன. இதுவரை எந்த தலைமை தேர்தல் ஆணையர் மீதும் எதிர்க்கட்சிகள் பதவி நீக்க நோட்டீஸ் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!