Politics
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், ஆரம்பத்தில் இருந்து அந்த கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் இருந்து கூட்டணி ஆட்சி வரை அந்த கூட்டணியில் மாறி மாறி கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே இந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், சிறுபான்மை சமூக வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது. முதல்வர் தேர்வில் பாஜகவின் திட்டம் பலிக்க்காது. எப்படி முயன்றாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது அதிமுக தான். இதனை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு சாத்தியம் இல்லை. தனிமனிதர்களை விடவும் அதிமுக தொண்டர்கள் கட்சியைத் தான் பெரிதாக மதிப்பார்கள்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!