Politics
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்த பாஜக !
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பல இடங்களில் பாஜக அதிக இடங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரம் அந்த மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஏராளமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த கான ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், குஜராத்தில் உள்ள 1 சட்டமன்ற தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றள்ளது. அதே குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், பிற மாநிலங்களிலும் பாஜக குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!