Politics
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்த பாஜக !
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பல இடங்களில் பாஜக அதிக இடங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரம் அந்த மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஏராளமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த கான ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், குஜராத்தில் உள்ள 1 சட்டமன்ற தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றள்ளது. அதே குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், பிற மாநிலங்களிலும் பாஜக குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!