Politics
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்த பாஜக !
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பல இடங்களில் பாஜக அதிக இடங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரம் அந்த மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஏராளமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த கான ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், குஜராத்தில் உள்ள 1 சட்டமன்ற தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றள்ளது. அதே குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், பிற மாநிலங்களிலும் பாஜக குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Also Read
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடப்பகுதி… நீதித்துறைக்கு இது பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!