Politics
"தவறு நடந்திருந்தால் அந்த தவறை பார்க்க வேண்டும்"-பாஜக முதல்வருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இந்த வன்முறையின் பின்னணியில் அம்மாநில முதல்வராக இருந்த பிரேன்சிங் இருந்ததாக புகார் எழுந்தது. மேலும் அவருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களும் வெளியாகின.
அதைத் தொடர்ந்து பிரேன்சிங் மணிப்பூரில் வன்முறையை தூண்டினார், அதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்றம் குரல் பதிவை ஆய்வு செய்ய தடைய அறிவியல் சோதனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தடைய அறிவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது சீலிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர். பின்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை பாதுகாப்பதற்கு பதிலாக, தவறு நடந்திருந்தால் அந்த தவறை பார்க்க வேண்டும்.தடைய அறிவியல் அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசுங்கள். புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய அறைன் கருத்தை தெரிவிக்க கூறி வழக்கை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.. சிகரத்துக்கு மகுடம்” : முரசொலி தலையங்கம்!
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!