Politics
கல்லூரியில் மதவாத கோஷம் : "ஆளுநரின் அநாகரீகமான அத்துமீறலை கண்டிக்கிறோம்" - ராஜீவ்காந்தி விமர்சனம் !
அண்மையில் அரசு உதவிபெறும் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ஆளுநர் ஆ.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் மாணவர்களை 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் போடவைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் கல்விச்சூழலைச் சிதைக்க நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், அதற்கு களம் அமைத்துக்கொடுத்த கல்லூரிக்கும் கண்டனம்
தமிழ்நாட்டு மாணவர்களிடையே மத வெறுப்பைத் திணித்து, இங்கே இருக்கும் ஆரோக்கியமான கல்விச்சூழலைக் காவுவாங்கும் நாசகர வேலையில் இறங்கியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதற்கு தியாகராசர் பொறியியல் கல்லூரியும் துணைபோயிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாந்தி எடுப்பதற்கும் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியதவாராக இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த சில ஆண்டுகளாகவே வாயில் வந்ததையெல்லாம் சகட்டுமேனிக்குப் பேசிவரும் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து கிடப்பில் போட்டதோடு, 'நான் கிடப்பில் போட்டால் அந்த மசோதா செத்துவிட்டதாக அர்த்தம்' என்றெல்லாம் வாய்க்கொழுப்பெடுத்துப் பேசினார். அதற்கான தக்க பதிலை நீதிமன்றத்திடமிருந்தும் வாங்கிக்கட்டிக்கொண்டும் இன்னும் அவர் திருந்தவில்லை.
அரசு உதவிபெறும் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ஆளுநர் ஆ.என்.ரவி பங்கேற்ற கம்பர் 2025 விழா' 12.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி விடுமுறை நாளான அன்று எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீரென கல்லூரி முதல்வர் வாயிலாக அந்த நிகழ்ச்சிக்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், துறைக்கு 60 மாணவர்கள் என்று 9 துறைகளிலிருந்து கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் 45 ஆசிரியர்களும் துறைத் தலைவர்களுமாக மொத்தம் 600க்கும் மொத்தம் 600க்கும் மேற்பட்டோரை, கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது, 6 மணிக்குத் தொடங்குகிற நிகழ்ச்சிக்காக, பிற்பகல் 2 மணிக்கே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அரங்கில் கொண்டுவந்து அடைத்ததோடு, கிட்டத்தட்ட 4 மணி நேரம் குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்காமல், இயற்கை உபாதைகளுக்குக்கூட வெளியே செல்ல அனுமதிக்காமல், அடைத்துவைத்து அந்த அரங்கை வதைமுகாமைப்போல மாற்றிவைத்திருந்திருக்கிறார்கள். ஆர்.என்.ரவி என்ற தனிமனிதருக்காக, மாணவர்களையும் ஆசிரியர்களையும் சக உயிர்களாகக்கூட மதிக்காமல், ஆளுநரின் ஏவல் ஆளாக நடந்துகொண்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்சம் வைத்ததுபோல் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவியோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசியதோடு, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிராக வகுப்பு வாதத்தைத் துண்டும் விதமாகவும் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலும் சனாதனத்தை வலியுறுத்தியும் அங்கே இருந்தவர்கள் அனைவரின் முகம் சுழிக்கும் வகையில் வெறுப்பைக் கக்கியிருக்கிறார். கூடவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் போடவைத்து அநாகரிமாக நடந்துகொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நிலவும் ஆரோக்கியமான கல்விச்சூழலைச் சிதைக்கும் வகையில் மாணவர்களிடையே பேசியிருக்கிறார் ஆர்.என்.ரவி. அதற்கு மேடைஅமைத்துக்கொடுத்திருக்கிறது தியாகராசர் கல்லூரி நிர்வாகம். தியாகராசர் கல்லூரி நிர்வாகம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. சமீபத்தில்தான் அரசியல் சாசனத்தை மதிக்காமல் நடந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின் புத்திக்கு உரைக்கும் வகையில் பாடம் எடுத்தது உச்ச நீதிமன்றம். அதிலிருந்து அவர் கொஞ்சமும் பாடம் கற்கவில்லை என்பது புரிகிறது. விரைவில் புரியும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள். ஆளுநரின் இந்த அநாகரீகமான அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
Also Read
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !