Politics
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுத்து, மாநிலத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது பாஜக - செல்வப்பெருந்தகை !
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் படுதோல்வி அடைந்த கூட்டம், இப்போது ஆறுபடை வீட்டின் முதல் வீடு திருப்பரங்குன்றத்தில் தங்களது களங்கத்தை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு வெளியில் இருந்து மக்களை கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராகவும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது பாஜக. இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக எங்கள் தலைவர் பெருமக்களோடு திருப்பரங்குன்றத்தில் முருகன் ஆலயத்திலும்,தர்காவிலும் வழிபாடு செய்ய உள்ளோம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. தொழிற்சாலை உற்பத்தி, உள்நாட்டு உற்பத்தி வெளிநாட்டு ஏற்றுமதி, கல்வித்துறையில் புரட்சி, உள்ளிட்டவைகளை கெடுப்பதற்கு ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் பாஜக வின் துணையோடு தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும் .அரசியல் என்பது வேறு, ஆன்மீகம் என்பது வேறு. அரசியலை ஆன்மீகத்தில் கலக்கக்கூடாது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஏற்கனவே பாஜக தலைவராக இருந்த முருகன் வேலை கையில் எடுத்து அரசியல் செய்தார். ஆனால் அது எடுபடவில்லை. இறைவன் முருகனிடம் உங்களது அரசியல் எடுபடாது. முருகன் அவர்களை அனுமதிக்க மாட்டார்
எச்.ராஜா அண்ணாமலை போன்றவர்கள் காலம் காலமாக இஸ்லாமியர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியார் சிலையை யார் வைத்தது என அதனை எதிர்த்து இவர்கள் போராட முடியுமா? சிகந்தர் பாதுஷா தர்காவை எதிர்த்து போராடும் நீங்கள் ஏன் துலக்க நாச்சியாருக்கு எதிர்த்து போர் கொடி தூக்க மறுக்கிறீர்கள்,
உச்ச நீதிமன்றம் எத்தனை கொட்டு வைத்தாலும் பாஜக நியமிக்கும் ஆளுநர்களுக்கு திருந்துவதாக இல்லை. ஆளுநர் பிடிவாதமாக இருக்கப் போகிறாரா அல்லது அரசியல் சட்டத்தை மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!