Politics
”நாடு எங்கே செல்கிறது? கோட்சேவை தியாகி என பாஜக MP நாடாளுமன்றத்திலேயே சொல்கிறார்” - அப்பாவு வேதனை !
சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர் கண்மணி எழுதிய "அங்காயா வம்சம்" மற்றும் " தூக்கத்தைத் தின்றவர்கள்" நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவில் தோன்றிய மொழிகளில் வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பது தமிழ் மொழி மட்டும்தான். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழி. ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை என்பதற்கான இலக்கை காட்டுவது தான் "இலக்கியம்".
இந்தியாவில் தோன்றி நீண்ட காலமாக ஆட்சியில் அதிகாரத்தில் அவர்கள் மட்டும் படித்து பட்டம் பெற்று, வேறு எந்த சமூகத்தையும் படிக்க விடாமல் குருகுலர் கல்வி என்று வைத்து அவர்கள் மட்டும் இந்தியாவில் உள்ள 10% பேர் மட்டுமே கல்வி கற்று யார் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரத்திலிருந்து கோலாச்சினார்கள்.
மிகப்பெரிய சதியை செய்து மகாத்மா காந்தியையே படுகொலை செய்தார்கள். அவரை கொன்ற கோட்சே மிகப்பெரிய தியாகி என்று நாடாளுமன்றத்திலே மத்திய பிரதேசம் நாடாளுமன்ற உறுப்பினரே நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள் என்றால் இந்தியா எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
இதனை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது மன உளைச்சலோடு சொல்லுகிறேன். இந்த நிலை மாற வேண்டும் .ஜாதியை பற்றி சொன்னார்கள், அதைவிட தாண்டி மதம், மகாத்மா காந்தியோடு நின்றுவிடும் என்று நினைத்தோம். அது தொடர்வது வேடிக்கையாக இருக்கிறது. எழுத்தாளர்களுக்கு எல்லாம் அடைக்கலமாக .பாதுகாப்பாக தமிழ்நாடு இருக்கிறது. மற்ற மாநிலங்களிலெல்லாம் எழுத்தாளர்கள், படைப்பாளிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளர்களுக்காக பல நல்லத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இந்த ஆட்சிதான் எழுத்தாளர்களின் பொற்காலம் என கூற வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம்தான் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தில் நம்முடைய விவாதங்களில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.நம்முடைய ஜனநாயகம் சிதைந்து விடுமோ என்ற ஒரு அச்சம் நமக்கெல்லாம் ஏற்படுகின்றது. நம்மை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பதே இந்த இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அந்தச் சட்டத்தை நிலை நாட்ட கூடிய நீதி அரசர்கள் தேவையற்ற வார்த்தையை பயன்படுத்தலாமா என்பதுதான் நமக்கு மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது ?. இந்திய அளவில் சதி நடந்து கொண்டிருக்கிறது. அதனை அனைவரும் முறியடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!