Politics
ரூ. 300க்கு காசோலையா? : உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய சிரிப்பலை!
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் விளங்குகிறது. அதன் காரணமாகவே, அம்மாநிலத்தில் என்றும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு.
அதில் முதன்மை நடவடிக்கைகளாக ராமர் கோவில் கட்டமைப்பு, பாபர் மசூதி புறக்கணிப்பு, மதத்தின் பெயரிலான ஆட்சி, காவல்துறைகளுக்கு அமாவாசை, பௌர்ணமியை பார்த்து விசாரணை மேற்கொள்ள ஆணையிடுவது, விவசாய வஞ்சிப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இது போன்ற நடவடிக்கைகளால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் முன்னணி மாநிலம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது உத்தரப் பிரதேசம்.
குறிப்பாக, ராமர் கோவில் திறப்பிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பது, கல்வியை இரண்டாவதாக்கி, மதத்தை முதன்மைப்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மற்றொரு செயல், உத்தரப் பிரதேச மக்களை கோவப்படுவதா? அல்லது சிரிப்பதா? என்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம் என்ற பெயரில் விழா எடுத்து, கடுமையான விலைவாசி உயர்வு இருக்கிற காலகட்டத்தில் ரூ. 300க்கான காசோலையை வழங்கியிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
மாணவர்களின் அடிப்படைத் தேவையை கூட, பூர்த்தி செய்ய இயலாத ரூ. 300-ஐ வழங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம் என பல்வேறு தரப்பினர், யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைக்கு தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றன.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!