Politics
நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ராஜ்நாத்சிங் : உண்மையை வெளிச்சம்போட்டு காட்டிய ராகுல் காந்தி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து சரமாரியாக கேள்விளை எழுப்பினார். அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் குற்றம்சாடி இருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ”நீண்ட யோசனைகளுக்கு பிறகே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கிடைக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள வீடியோ ஒன்றில், ”மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் செல்லியுள்ளார். அவரத பொய்யை ராணுவ வீரரின் தந்தையே அம்பலப்படுத்தியுள்ளார். எனவே ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், ராணுவ வீரரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பெரம்பலூர் கைத்தறி உற்பத்திக்கான நிலுவலையிலுள்ள திட்டங்களின் நிலை என்ன?: மக்களவையில் அருண் நேரு MP கேள்வி
-
ஈரோட்டில் ஜவுளிக் கழிவுகள் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும் : மாநிலங்களவையில் தி.மு.க MP வலியுறுத்தல்!
-
“போலி விவசாயி பழனிசாமியின் பொய்கள்” முரசொலி தலையங்கம் கடும் விமர்சனம்!
-
விவசாயிகளுக்கான நிதிகளை தாமதப்படுத்துவது ஏன்? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கலாநிதி வீரசாமி MP!
-
தி.மு.க கூட்டணியின் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எப்போது? : வெளியான முக்கிய அறிவிப்பு!