Politics
நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ராஜ்நாத்சிங் : உண்மையை வெளிச்சம்போட்டு காட்டிய ராகுல் காந்தி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து சரமாரியாக கேள்விளை எழுப்பினார். அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் குற்றம்சாடி இருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ”நீண்ட யோசனைகளுக்கு பிறகே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கிடைக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள வீடியோ ஒன்றில், ”மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் செல்லியுள்ளார். அவரத பொய்யை ராணுவ வீரரின் தந்தையே அம்பலப்படுத்தியுள்ளார். எனவே ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், ராணுவ வீரரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!