Politics
அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவி பிரமாணம்... - மக்களவையில் மாஸ் காட்டிய எதிர்க்கட்சி MP-க்கள் !
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இதனிடையே பாஜகவினர் பிரசாரத்தின்போது, அரசியலமைப்பை மாற்றுவதே நோக்கம் என்ற வகையில் பேசி வந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு உண்மைக்கு புறம்பான பிரசாரங்களிலும் மோடி உட்பட பாஜகவினர் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அரசியலமைப்பை பாதுகாப்பது நமது கடமை என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். அதிலும் ராகுல் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தின் சிறிய புத்தகத்தையும் வைத்துக்கொண்டே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது மக்கள் மத்தியில் சிறந்த கவனத்தை பெற்றது.
இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. அதன்படி இன்று 266 எம்.பி-க்களும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மீதமிருக்கும் எம்.பிக்கள் நாளை பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவுள்ளனர். அவ்வாறு இன்று பதவி பிரமாணம் செய்துகொண்ட எம்.பிக்களின் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் பலரும், அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அதிலும் அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. ரக்கிபுல் உசைன், அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடியே பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். மேலும் கேரளாவை சேர்ந்த பல எம்பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் பிடித்தபடி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதோடு இந்த புத்தகத்தை ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் தங்கள் கைகளில் உள்ளதை அனைவரும் காண்பித்தனர்.
குறிப்பாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்திப் பிடித்தனர்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!