Politics
இஸ்லாமியர்களின் வாக்காளர் அட்டையை சோதனை செய்த பாஜக வேட்பாளர் : குவியும் கண்டனம் !
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா என்பவர் மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி கண்டங்களை எழுப்பியது.
பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவால் யாரின் மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன் என்று பாஜக வேட்பாளர் மாதவி கூறினார்.
இந்த நிலையில் , தற்போது பாஜக வேட்பாளர் மாதவி லதா இஸ்லாமியர்களின் அடையாள அட்டையை சோதனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி வாக்குச்சாவடிக்கு வந்த இஸ்லாமியர்களிடம் ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா அடையாள அட்டையை கேட்டு அதனை சோதனை செய்துள்ளார். இது குறித்து வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்தனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!