Politics
மீண்டும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியை முற்றுகையிட கிளம்பிய விவசாயிகள்... சாலையில் ஆணி அடித்த பாஜக அரசு!
ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர், இந்த சூழலில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், போலீசார் சாலைகளில் ஆணி அடித்து தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஹரியானா, உத்திரபிரதேச விவசாயிகள் அரியானா வழியாக டெல்லிக்குள் நுழையாமலும் தடுக்க அந்த பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையலால் என்பதால் டெல்லியில் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மார்ச் 11ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று டெல்லி துணை கமிஷனர் ஜாய் திற்கே அறிவித்துள்ளார்
போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து டெல்லி எல்லைகளில் மத்திய படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஹரியானா பாஜக அரசு இணையவசதிகளை முடக்கியுள்ளது.
Also Read
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!