Politics
பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் : நாடாளுமன்றத்தில் தொடரும் அராஜகம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்.
அப்போது அவர், ”ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்’ என சொன்னவர் தந்தை பெரியார்.”என பேசினார். இதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே எம்.எம். அப்துல்லாவின் இப்பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "எம்.எம்.அப்துல்லா பேசியது அவரது கருத்து கிடையாது. பெரியாரின் கருத்து. அவர் பேசியதை நீக்கியது பேச்சுரிமைக்கு எதிரானது" என கண்டித்துள்ளார்.
அதேபோல் திருச்சி சிவா MP,"பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியதில் எந்த தவறும் இல்லை. தி.மு.கவுக்கு தனியாக எந்த வண்ணமும் பூச வேண்டாம். தி.மு.க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தேச நலனுக்காகவே செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது 370 சிறப்பு அதிகாரம் மீண்டும் திருப்பக் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!