Politics
பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் : நாடாளுமன்றத்தில் தொடரும் அராஜகம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்.
அப்போது அவர், ”ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்’ என சொன்னவர் தந்தை பெரியார்.”என பேசினார். இதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே எம்.எம். அப்துல்லாவின் இப்பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "எம்.எம்.அப்துல்லா பேசியது அவரது கருத்து கிடையாது. பெரியாரின் கருத்து. அவர் பேசியதை நீக்கியது பேச்சுரிமைக்கு எதிரானது" என கண்டித்துள்ளார்.
அதேபோல் திருச்சி சிவா MP,"பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியதில் எந்த தவறும் இல்லை. தி.மு.கவுக்கு தனியாக எந்த வண்ணமும் பூச வேண்டாம். தி.மு.க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தேச நலனுக்காகவே செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது 370 சிறப்பு அதிகாரம் மீண்டும் திருப்பக் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு