Politics
பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் : நாடாளுமன்றத்தில் தொடரும் அராஜகம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்.
அப்போது அவர், ”ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்’ என சொன்னவர் தந்தை பெரியார்.”என பேசினார். இதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே எம்.எம். அப்துல்லாவின் இப்பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "எம்.எம்.அப்துல்லா பேசியது அவரது கருத்து கிடையாது. பெரியாரின் கருத்து. அவர் பேசியதை நீக்கியது பேச்சுரிமைக்கு எதிரானது" என கண்டித்துள்ளார்.
அதேபோல் திருச்சி சிவா MP,"பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியதில் எந்த தவறும் இல்லை. தி.மு.கவுக்கு தனியாக எந்த வண்ணமும் பூச வேண்டாம். தி.மு.க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தேச நலனுக்காகவே செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது 370 சிறப்பு அதிகாரம் மீண்டும் திருப்பக் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !