Politics
”உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு”.. ப.சிதம்பரம் கடும் தாக்கு!
உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது. இதனால் வழக்குகளை முடிக்க முடியாமல் உயர் நீதிமன்றங்களில் காத்துக்கிடக்கின்றன.
இதற்கிடையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாகப் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு குறித்து 10 நாட்களுக்கு ஒருமுறை நீதிபதிகளின் பரிந்துரைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தினர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற அமைப்பை ஒன்றிய அரசு சிதைக்கிறது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைத்தள பதிவில், "உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட 70 பரிந்துரைகள் அரசிடம் பல மாதங்களாக நிலுவையில் இருப்பது ஏன்?
கொலிஜீயத்தின் பரிந்துரைகளின் படி நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அரசாங்கம் அழித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கொண்டு மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க : முரசொலி கண்டனம்!
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?