Politics
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மூடப்பட்ட 29 ஆயிரம் பள்ளிகள்.. வெளிவந்த தகவலால் அதிர்ச்சி !
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2003-ம் ஆண்டு மாயாவதி தலைமையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் தொடர்ந்து 18 ஆண்டுகள் அந்த மாநிலத்தை பாஜக ஆண்டு வருகிறது. பாஜகவின் ஆட்சிக் காலத்தில் மத்திய பிரதேச மாநிலம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
அதன் காரணமாகவே 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதையும் பாஜக எம்.எல்.ஏக்களை வளைத்ததன் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை தூக்கியெறிந்தது. இந்த நிலையில், பாஜகவின் 18 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் 29,000 பள்ளிகள் மூடப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் MP ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தும் அங்கு 26,000 அரசு பள்ளிகளுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 29,000 பள்ளிகள் மூடப்பட்டு 9 லட்சம் மாணவர்களின் படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 23 வயதுக்குட்பட்ட 70 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது நிதிப்பற்றாக்குறை காரணமாக ஏராளமான பள்ளிகளை மூடினார். ஆனால், அதன்பின்னர் முதல்வரான காமராஜர் அந்த பள்ளிகளை திறந்தார் என்பதை படித்துள்ளோம். ஆனால், தற்போது பாஜக அரசு மீண்டும் அதே போன்ற சம்பவத்தை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!