Politics
ரூ.1 கோடி இருந்தால்தான் அதிமுகவில் சீட்.. ஆடியோ வெளியிட்ட OPS தரப்பு.. சர்ச்சையில் கே.பி. முனுசாமி !
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா- ஓ.பி.எஸ் தரப்பு என இரண்டாக பிரிந்த அதிமுக பின்னர், தினகரன் -ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தரப்பு என இரண்டானது.
அதன்பின்னர் ஒன்றாக இருந்த ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தரப்பே இரண்டாக பிரிந்து ஒருவருக்கொருவர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த இரு தரப்பின் மோதல் மூலம் அதிமுக வின் பித்தலாட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு புகார் தெரிவித்து இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்துள்ளார்.
அந்த ஆடியோவில் ரூ.1 கோடி இருந்தால்தான் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர முடியும் என கே.பி. முனுசாமி பேசுவதும், முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு 50 லட்சம் தருவதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுவதும் பதிவாகியுள்ளது. மேலும் இந்த பணத்தை வாங்க தனது மகனை நேரில் அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுவதும் அதில் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் அதிமுகவில் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் மூத்த தலைவர்களுக்கு ரூ.1 கோடி வரை தரவேண்டும் என்ற செய்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த ஆடியோ வைரலாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் அதிமுகவின் இந்த மோசமான செயலை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!
-
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி... 3 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள்!
-
அரசுப் பள்ளிகளில் வகுப்பறை முதல் கழிவறைகள் வரை.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.145 கோடியில் தங்கும் விடுதி.. புதிய அடுக்குமாடி C வகை குடியிருப்பு.. திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!