Politics
இந்தி எதிர்ப்பு போராட்டம் : "நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல.." - அமைச்சர் பொன்முடி !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு பல இன்னல்கள் கொடுத்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து வருகிறது.
அதில் ஒன்று தான் 'புதிய கல்வி கொள்கை'. ஒன்றிய அரசு இந்த கல்விக் கொள்கை மூலம் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறது. இதனை கண்டித்து பல்வேறும் மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அதோடு அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு தற்போது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் மேற்கு வங்கம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை எடுத்திருக்கும் நிலையில், கேரள முதல்வர் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நாளை (15.10.2022) இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்" என்றார்.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!