Politics
நாம் துப்பாக்கி எடுத்தால் டெல்லி போலிஸ் டீ கொடுத்து அதை அனுமதிக்கும் -இந்துத்துவ அமைப்பு சர்ச்சை கருத்து!
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்கள் பேசும் வன்முறை பேச்சுகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது போன்ற வன்முறை பேச்சுகளுக்கு பாஜக தலைவர்களும் மௌனமாக ஆதரித்து வருவதால் தொடர்ந்து இதுபோன்ற வன்முறை பேச்சுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து மதவெறி கருத்துக்களை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. இதில் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேச்சாளர் ஜகத் குரு யோகேஷ்வர் ஆச்சாரியா என்பவர், ம்மை தாக்கியவர்களின் தலைகளையும் கைகளையும் துண்டித்துவிடுங்கள், இதற்காக அதிகபட்சம் உங்களை சிறையில் அடைப்பார்கள் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
அதே கூட்டத்தில் பேசிய மற்றொரு பேச்சாளரான மஹாந்த் நவால் கிஷோர் தாஸ், துப்பாக்கிகளை வாங்குங்கள். அதற்கான உரிமத்தை பெறுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைத்தால் டெல்லி காவல் ஆணையர் கூட தேனீர் கொடுத்து நாம் நினைப்பதை செய்ய அனுமதிப்பார் என்று வன்முறைக்கு போலிஸார் கூட ஆதரவாக இருப்பார் என்ற விதத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், பலரும் இந்த மதவெறி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு போலிஸார் இவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த பேச்சு அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!