Politics
"ஒரு கப் சாயா குடிக்க வாங்க தலைவரே":அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்று டீ குடித்த ராகுல் -திட்டமிடாத நிகழ்வு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்கிறார். குமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.
குமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தை 4-வது நாளான நேற்றைய முன்தினம் தமிழகத்தில் முடித்து நேற்று கேரளாவில் தொடங்கினார். அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கும் ராகுல் காந்திக்கு கேரளா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட போது வழிகளில் இருந்த டீ கடைக்காரர்கள், பொதுமக்கள் என பலரும் அவரை டீ குடிக்க அழைத்துள்ளனர். அவர்கள் அழைப்பை மறுக்க முடியாத ராகுல் காந்தி அதில் ஒரு குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று சாதாரண சேரில் அமர்ந்து அவர்களோடு சகஜமாய் பேசி சிரித்துக்கொண்டே டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டார்.
இதனால் அந்த குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். ராகுல் காந்தி பேசிக்கொண்டே டீயும் - பிஸ்கட்டும் சாப்பிடுவது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !