Politics
"OPS எப்போவாச்சும் உண்மைய பேசுவாரு" : தி.மு.கவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓ.பன்னீர்செல்வம்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்., 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
நெல்லை, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாய் தவறி உண்மையைச் சொல்லி வாக்கு சேகரித்துள்ளார்.
10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து எடை போட்டு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களியுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க தலைமையிலான அரசுதான். ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என தலைமைவகித்த இந்த ஆட்சியின் அவலங்கள் ஏராளம்.
இந்த அவல ஆட்சியை ஒழித்துக்கட்டும் விதமாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவை புறக்கணித்த மக்கள் தி.மு.கவுக்கு பெரும் வரவேற்பு அளித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக அல்லல்பட்டு வந்த மக்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
மக்களின் உணர்வை புரிந்துகொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பரப்புரையின்போது உண்மையைப் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!