Politics
”தமிழகத்தை பா.ஜ.க அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது” - தி.மு.கவில் மீண்டும் இணைந்தார் கு.க.செல்வம்!
முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம், பா.ஜ.கவில் இருந்து விலகி, தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மீண்டும் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் கு.க.செல்வம்.
கு.க.செல்வம் தி.மு.கவில் தலைமை நிலைய அலுவலக செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்த இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.கவில் இணைந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பா.ஜ.க அரசு முற்றிலும் புறக்கணிக்கிறது. நீட், வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்து அக்கட்சியில் இருந்து விலகினேன். தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்படுவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!