Politics
”பேரு வெச்சீங்களே சோறு வெச்சீங்களா?” - எடப்படி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சமச்சீர் புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி வள்ளுவரையே மறைத்த ஆட்சி , கஜா புயல் நிவாரணத்தின் போது தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது அதிமுக ஆட்சி. அதிமுகவை போன்று ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி திமுக ஆட்சி அல்ல.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் , ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் 95 விழுக்காடு பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் பின்னர் வந்த அதிமுக ஆட்சி தாங்கள் கொண்டு வந்தது போலும் கோயம்பேடு பேருந்து நிலையம் , ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது.
இன்றைக்கு திறக்க விருதுநகர் மருத்துவ கல்லூரியும் திமுக ஆட்சியில் அறிவித்ததுதான். நீங்கள் பெற்ற பிள்ளைக்கு பேர் வைத்தீர்களே சோறு வைத்தீர்களா என கேட்க தோன்றுகிறது
திமுக கோடி சூரியனுக்கு இணை. அதன் ஒளி உதிரி நட்சத்திரங்களுக்கு தேவைப்படுமே, தவிர திமுகவுக்கு தேவைப்படாது. விதைக்கிற நேரத்தில் வெளியூர் சென்று விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளை தூக்கி வரும் நிலை போல் உள்ளது எதிர்க்கட்சி தலைவரின் பேட்டி என அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!