Politics
MLA சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; சிக்கிய பாஜக அமைச்சரின் உதவியாளர்; சென்னை கோர்ட் அதிரடி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஸ்குமார் பா.ஜ.க. பிரமுகர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இவரது உறவினர் வசந்தி என்பவருக்கு ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. சார்பில் சீட் வாங்கி தருவதாக கூறி தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஒன்றிய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் ரூ.50 லட்சம் வாங்கி உள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்த படி சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நரோத்தமன் மீதும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை டி.வி.பிரசாத் மீதும் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!