Politics
ஆதரவாளர்களை ரகளையில் ஈடுபட வைத்து தப்பிய அதிமுக ஒன்றிய செயலாளர்; சென்னையில் பதுங்கியவர் அதிரடியாக கைது!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த துரை செந்தில். இவர் மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி அமுதா மதுக்கூர் ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகிக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைமுயற்சி வழக்கு தொடர்பாக நேற்று மதியம் துரை செந்திலை கைது செய்து மதுக்கூர் காவல்நிலையம் அழைத்து வந்த நிலையில் , அங்கு திரண்ட துரை செந்திலின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனை பயன்படுத்தி அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட அதிமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டும், 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் தனிப்படை அமைத்து சென்னையில் மறைந்திருந்த துரை செந்திலை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சிய களேபரங்களால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!