Politics
போதும் உங்க முட்டு : மதுவந்தி, S.V.சேகர், K.T.ராகவனை பிரசாரத்திற்கு அனுப்பவேண்டாம் என மன்றாடிய அ.தி.மு.க!
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மிரட்டல் காரணமாக பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளை ஒதுக்கினாலும், தமிழகத்தில் நிலவும் கடுமையான பா.ஜ.க எதிர்ப்பலை காரணமாக பா.ஜ.க தலைவர்கள் பெயரைச் சொல்லி வாக்கு கேட்பதற்கு அச்சாடைந்துள்ளனர் அ.தி.மு.கவினர்.
இதில் உச்சமாக, எல்.முருகன், வானதி சீனிவாசன், குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்களே தங்களது தொகுதிப் பிரச்சாரங்களின்போதும், நோட்டீஸ்களிலும் மோடியை இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.
பா.ஜ.க தலைவர்களை முன்னிலைப்படுத்தினால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்ததால் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் படங்களை பயன்படுத்தவே அ.தி.மு.க கூட்டணியினர் தயங்கி வருகின்றனர்.
தமிழகத்தையும் தமிழக மக்களையும் விரோதிகளாகப் பார்த்துவரும் பிரதமர் மோடியின் எந்தச் சாதனையைச் சொல்லி இங்கு வாக்குக் கேட்பது என்பதே அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் இத்தகைய திணறலுக்குக் காரணம்.
பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேசும் எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், மதுவந்தி ஆகியோரை சென்னை உட்பட பல பகுதிகளும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள வைக்க திட்டமிட்டிருந்தது பா.ஜ.க. ஆனால், நீங்கள் எங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யாமல் இருப்பதே எங்களுக்குச் செய்கிற உதவி என அலறித் துடிக்கின்றனராம் அ.தி.மு.க வேட்பாளர்கள்.
ஆட்சிக்காலம் முழுவதும் பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருந்து தமிழக மக்களிடம் அசிங்கப்பட்டது போதாதென்று, பா.ஜ.க கூட்டணியில் இருப்பதாலேயே கிடைக்கின்ற வாக்குகளும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருப்பதாக கண்ணீர் வடிக்கின்றனர் அ.தி.மு.க மற்றும் பா.ம.க வேட்பாளர்கள்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!