Politics
ஜெ.நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்சி கரை சேலையில் வர வற்புறுத்தல் - அதிமுக அராஜகம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் கட்டும் பணியை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.
சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் வருகிற ஜனவரி 27ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. ஆனால், நினைவிடத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுக்காமல் பொதுப்பணித்துறை அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்டாயம் வர வேண்டும் என அதிமுக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. அதன்படி, காயிதே மில்லத், ராணி மேரி, பாரதி கல்லூரி பேராசியர்களுக்கு தத்தம் கல்லூரிகள் சார்பில் காணொலி மூலம் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, 27ம் தேதியன்று கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிமுக கரை கொண்ட வேட்டி, சேலை கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் அதற்கான உடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை அதிமுக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தும் செயலுக்கு கல்வியாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!