Politics
ஜெ.நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்சி கரை சேலையில் வர வற்புறுத்தல் - அதிமுக அராஜகம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் கட்டும் பணியை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.
சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் வருகிற ஜனவரி 27ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. ஆனால், நினைவிடத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுக்காமல் பொதுப்பணித்துறை அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்டாயம் வர வேண்டும் என அதிமுக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. அதன்படி, காயிதே மில்லத், ராணி மேரி, பாரதி கல்லூரி பேராசியர்களுக்கு தத்தம் கல்லூரிகள் சார்பில் காணொலி மூலம் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, 27ம் தேதியன்று கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிமுக கரை கொண்ட வேட்டி, சேலை கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் அதற்கான உடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை அதிமுக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தும் செயலுக்கு கல்வியாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!