Politics
“ரஜினி இஸ்லாமியர்களுக்காக இப்படித்தான் போராடுவார்” - ரஜினி முன் சொன்ன அறிவிப்புகள் என்னவானது?
நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை தன் வீட்டு வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது. ஒருவேளை அப்படியொரு நிலை ஏற்பட்டால், இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுப்பேன்.” எனத் தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அச்சுறுத்தும் விதமாகப் பேசிய ரஜினிகாந்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்லாமிய வெறுப்பைக் கையாண்டு வரும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக, குடியுரிமை சட்டத்தை ஆதரித்துப் பேசி வரும் ரஜினியின் பேச்சுகள் தண்ணீரில் எழுதப்படுபவை தான்.
இப்படி பல அறிவிப்புகளை வெளியிட்ட கணத்தோடு மறந்துவிட்டவர் ரஜினிகாந்த். 2002ம் ஆண்டு நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவேன் என அறிவித்தார். அது அறிவிப்போடு மட்டுமே நின்று போனது.
2004ம் ஆண்டு கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பும் செய்தியோடு நின்றுபோனது; செயல்பாட்டுக்கு வரவில்லை.
2010ம் ஆண்டு தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து வைப்பதாகத் தெரிவித்தார். பத்தாண்டு கடந்தாலும் விருந்து நடைபெற்றபாடில்லை.
அரசியலுக்கு வருவேன் என கபடி ஆடி வந்தாலும், 2017ம் ஆண்டின் இறுதியில் ரசிகர் மன்றக் கூட்டங்களை நடத்தி நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றார் ரஜினி. அதற்குப் பிறகு இந்திய அரசியலில் போர்ச் சூழல் வந்ததே தவிர ரஜினிக்கு போர் வரவில்லை.
சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை சட்டம் எனக் குறிப்பிடாமலேயே, போராட்டங்கள் தனக்கு வேதனை அளிப்பதாக ட்வீட் செய்தார். இன்றைக்கு, இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுப்பேன் என்றிருக்கிறார்.
முன்சொன்ன எதையும் பல்லாண்டுகள் கடந்தும் செய்ய முன்வராத ரஜினி இதை மட்டும் எப்படிச் செய்வார் என சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது சினிமா அல்ல என்பதை ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; ரஜினியும் உணரவேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்!
Also Read
-
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
“இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு என்றைக்கும் எதிர்க்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
இந்தி தான் தேசிய மொழியா? - நடு மைதானத்தில் நடந்த காரசார விவாதம்... வர்ணனையாளர்களால் வெடித்த சர்ச்சை!
-
“இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!