Politics
கர்நாடகாவில் கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது - அமைச்சர் டி.கே. சிவக்குமார் பேச்சு
கர்நாடக மாநில அரசியல் குழப்பம் உச்சத்தை தொட்ட நிலையில் நாளை மறுநாள் (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு தொடர்ந்து ஆட்சி புரியும்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் கர்நாடக கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சி உறுப்பினர்களும் எங்களுடனேயே உள்ளனர். அரசு கொறடா உத்தரவை எவரும் மீறவில்லை என தெரிவித்தார்.
Also Read
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !