Politics
இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு விஷப் பூச்சி - நாரயணசாமி நெத்தியடி !
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் காமராஜரின் உருவப் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளுக்காக பேனர் வைப்பதற்கு செலவிடப்படும் தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள் என கூறியவர் காமராஜர். ஆனால், தற்போது பணம் சம்பாதிப்பதற்காகவே சிலர் அரசியலுக்கு வருகின்றனர் என சாடினார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று 17 மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார் என பேசிய நாராயணசாமி, நாட்டில் உள்ள மக்களை மதத்தின் பேரின் துண்டாக பிரிக்க இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷப்பூச்சி என சாடியுள்ளார். சிறுபான்மையினர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று பாஜக.,வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் துடித்துக்கொண்டிருக்கிறது என்றார்.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !