Politics
இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு விஷப் பூச்சி - நாரயணசாமி நெத்தியடி !
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் காமராஜரின் உருவப் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளுக்காக பேனர் வைப்பதற்கு செலவிடப்படும் தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள் என கூறியவர் காமராஜர். ஆனால், தற்போது பணம் சம்பாதிப்பதற்காகவே சிலர் அரசியலுக்கு வருகின்றனர் என சாடினார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று 17 மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார் என பேசிய நாராயணசாமி, நாட்டில் உள்ள மக்களை மதத்தின் பேரின் துண்டாக பிரிக்க இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷப்பூச்சி என சாடியுள்ளார். சிறுபான்மையினர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று பாஜக.,வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் துடித்துக்கொண்டிருக்கிறது என்றார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!