Politics
மக்களவையில் விட்டதை உள்ளாட்சியில் பிடித்த கேரள மார்க்சிஸ்ட் கட்சி - 22 இடங்களில் வெற்றி!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் அரசாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி 20ல் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு சபரிமலை விவகாரத்தை மாநில அரசு கையாண்டதே காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று (ஜூன் 21) கேரளாவில் 33 கிராம பஞ்சாயத்துகளுக்கும், 6 ஒன்றிய பஞ்சாயத்துகளுக்கும் 5 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 44 இடங்களில், இடதுசாரிகளுடன் கூட்டணியில் உள்ள ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மக்களவை தேர்தலில் தோல்வியுற்றதற்கு சபரிமலை விவகாரம் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், சபரிமலை அமைந்திருக்கும் பத்தனம்திட்டா பகுதியிலும் இடதுசாரிகள் கூட்டணியே வெற்றியடைந்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் போன்று, தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் பா.ஜ.கவால் தனது வெற்றியை பதிவு செய்ய முடியாத நிலையே நீடித்து வருகிறது. அவ்வகையில் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே பா.ஜ.க வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!