Politics
ஊடகங்களில் தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க கூடாது - அ.தி.மு.க கூட்டத்தில் உத்தரவு !
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் இரட்டை தலைமைக்கு அக்கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க-வுடனான கூட்டணியே காரணம் என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து இன்று கூடிய அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் கூட்டத்தை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி.சண்முகம் மற்றும் ஒற்றைத் தலைமை கோரிய எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் என பலர் புறக்கணித்தனர்.
இதற்கிடையே, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊடகங்களில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது செய்தித் தொடர்பாளர்களோ எந்தவித கருத்தும் தெரிவிக்கக்கூடாது என அ.தி.மு.க உத்தரவிட்டுள்ளது. மீறி பேசினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது. இது அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !