Politics
உச்சகட்டத்தை எட்டியது அ.தி.மு.கவின் உட்கட்சி பூசல் | கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்!
அ.தி.மு.கவில் உள்ள இரட்டை தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மதுரை வடக்குத்தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி உயர்த்தினர். அ.தி.மு.கவின் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.
இவற்றையெல்லாம் விட, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால் தான் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அ.தி.மு.கவின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரின் பேச்சின் மூலம் அக்கட்சியின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது உறுதியானது.
ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடிக்கு எழுந்த ஆதரவை அடுத்து, கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்றையக் கூட்டத்தை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம், இரட்டை தலைமைக்கு போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!