Politics
உச்சகட்டத்தை எட்டியது அ.தி.மு.கவின் உட்கட்சி பூசல் | கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்!
அ.தி.மு.கவில் உள்ள இரட்டை தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மதுரை வடக்குத்தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி உயர்த்தினர். அ.தி.மு.கவின் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.
இவற்றையெல்லாம் விட, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால் தான் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அ.தி.மு.கவின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரின் பேச்சின் மூலம் அக்கட்சியின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது உறுதியானது.
ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடிக்கு எழுந்த ஆதரவை அடுத்து, கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்றையக் கூட்டத்தை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம், இரட்டை தலைமைக்கு போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!