Politics
வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் - நாராயணசாமி நம்பிக்கை !
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை புதுச்சேரி வந்தடைந்தது. இதன் வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "90 சதவீத கருத்து கணிப்புகள் பொய்த்து போயுள்ளது. கருத்து கணிப்புகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. 2004 மற்றும் 2009 ஆகிய கருத்துக் கணிப்புகள் பொய்யாகவே இருந்தது. ஆதலால் தற்போது வந்துள்ள கருத்து கணிப்பு குறித்து கூற முடியாது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரே உண்மையான முடிவு தெரியவரும்" இவ்வாறு கூறினார்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!