Politics
வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் - நாராயணசாமி நம்பிக்கை !
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை புதுச்சேரி வந்தடைந்தது. இதன் வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "90 சதவீத கருத்து கணிப்புகள் பொய்த்து போயுள்ளது. கருத்து கணிப்புகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. 2004 மற்றும் 2009 ஆகிய கருத்துக் கணிப்புகள் பொய்யாகவே இருந்தது. ஆதலால் தற்போது வந்துள்ள கருத்து கணிப்பு குறித்து கூற முடியாது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரே உண்மையான முடிவு தெரியவரும்" இவ்வாறு கூறினார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!