Politics
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத் & ஸ்மிருதி இராணிக்கு தடை!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிரவாக தத்தம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். தற்போது அவர்கள் பரப்புரையில் ஈடுபட மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல், நேற்று மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூரில் அமித்ஷா தலைமையில் நடைபெற இருந்த பேரணிக்கு தடை விதித்தும், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கவும் தடை விதித்திருந்தது அம்மாநில அரசு.
இந்த அனுமதி மறுப்பு மற்றும் தடை விதிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !
-
பெண்கள் குறித்து ஆபாச கருத்து : வழக்கை சந்திக்குமாறு பாஜக பிரமுகர் H ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !