Politics
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத் & ஸ்மிருதி இராணிக்கு தடை!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிரவாக தத்தம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். தற்போது அவர்கள் பரப்புரையில் ஈடுபட மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல், நேற்று மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூரில் அமித்ஷா தலைமையில் நடைபெற இருந்த பேரணிக்கு தடை விதித்தும், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கவும் தடை விதித்திருந்தது அம்மாநில அரசு.
இந்த அனுமதி மறுப்பு மற்றும் தடை விதிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!