Politics
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத் & ஸ்மிருதி இராணிக்கு தடை!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிரவாக தத்தம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். தற்போது அவர்கள் பரப்புரையில் ஈடுபட மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல், நேற்று மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூரில் அமித்ஷா தலைமையில் நடைபெற இருந்த பேரணிக்கு தடை விதித்தும், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கவும் தடை விதித்திருந்தது அம்மாநில அரசு.
இந்த அனுமதி மறுப்பு மற்றும் தடை விதிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!