murasoli thalayangam
விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்-2019 என்ற சட்டத்தை அ.தி.மு.க அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கரும்பு, மூலிகைப் பயிர்கள், விவசாயப் பயிர்கள், இறைச்சிக் கோழி உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம். இந்த சட்டம் விவசாயிகளை முழுமையாகக் கார்ப்பரேட்களின் கைகளுக்குள் கொண்டு சேர்த்துவிடும். மேலும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் மீதான அரசின் கட்டுப்பாடு தளர்ந்து, தனியார் ஆதிக்கத்திற்குச் சென்றுவிடும் என்ற கவலையில் விவசாயிகள் இருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அ.தி.மு.க அரசு இதுவரை கேட்கவில்லை. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் நிதி நிவாரணத்தைக் கூட விவசாயிகளிடம் கொடுக்காமல், அவர்கள் கொடுக்க வேண்டிய கடனுக்கு கழித்துக்கொள்கிறது.
டெல்டா மாவட்டங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம், சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை, விளைநிலங்களின் வழியே உயர்மின் கோபுரம் ஆகிய திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வை அடியோடு அழித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசு. இவற்றையெல்லாம் மறைக்க ஒப்பந்த சாகுபடி சட்டம் என்ற புதிய ஏமாற்று வித்தையைக் காட்டி திசை திருப்பிவிட முடியாது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!