murasoli thalayangam

உழைக்காமல் உண்டு கொழுத்தவரை கண்டால் யாருக்குதான் பொறாமை வராது? - எடப்பாடிக்கு முரசொலி பதிலடி!

வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்னைப் பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பொறாமையாக இருக்கிறது என முத்து உதித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய நாளேட்டில் தலையங்கம் வெளியிட்டுள்ளது முரசொலி. அதில், உழைக்காமல் உண்டு கொழுத்துவரைப் பார்த்தால் யாருக்குத்தான் பொறாமை ஏற்படாது என கிண்டலடிக்கும் தொணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உழைக்காமல் உருண்டு வந்து பதவி பெற்ற சாமர்த்தியம் எடப்பாடியைத் தவிர யாருக்குதான் வரும்? சம்பாதித்த பணத்தை மாஃபியா குடும்பத்துக்கு தலை விட்டு விடாமல், வீடு வீடாய் போய் பிரித்துக் கொடுத்த ஒருவர் தேசியக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரே என்று சசிகலா குடும்பம் தான் பொறாமைப்பட வேண்டும் என முரசொலி சாடியுள்ளது.