murasoli thalayangam

10% இட ஒதுக்கீட்டால் உயர்சாதி ஏழைகளுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை!- முரசொலி தலையங்கம்  

SBI தேர்வில் அறிவிக்கபட்டிருக்கும் உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 28.5% கட் ஆஃப் என்பது சமூகநீதிக்கு செய்யும் பச்சை துரோகம். மாதம் 66 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் ஏழை என்றால், இதில் உண்மையாக உயர்சாதியில் இருக்கும் ஏழைகள் எந்த நன்மையும் அடையப்போவதில்லை. ஏழைகளுக்கு தருவது போல ஏமாற்றி, உயர்சாதி பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகளை தருவதே பா.ஜ.க-வின் உள்நோக்கம் என இன்றைய முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.