murasoli thalayangam

நீட் மசோதா : 27 மாதங்கள் காக்கவைத்து தமிழகத்தை அவமதித்த மத்திய அரசு! - முரசொலி தலையங்கம்  

நீட் மசோதா நிராகரித்த விவகாரம்- 27 மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நீட் விலக்கு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதை மத்திய வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அதன்பிறகே நீட் மசோதாக்களின் நிலவரம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரிய வந்திருப்பதை, முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசுக்கு தெரிவிக்காமல், நீதிமன்றத்திற்கு தெரிவித்தால், அது மாநில அரசை அவமானப்படுத்தியதே ஆகும் என முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.