M K Stalin
“பவள விழாக் கண்டுவிட்டோம்! மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளாக கொள்கைத் துடிப்புடனுடம், சமூக நீதி உணர்வுடனும், தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் அளவுகடந்த பற்றுகொண்டு செயல்பட்டு வரும் தி.மு.க.வின் பவள விழா மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தி.மு.க தலைமையிலான கூட்டணி தலைவர்கள் பங்குகொண்டு, தி.மு.க.வின் தனிச்சிறப்புகளை முன்மொழிந்தனர். மேலும், தி.மு.க.வின் வருங்கால நடவடிக்கைகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
அதன் இறுதி உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தலைவர்கள் ஒன்றாதல் கண்டே! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என மகிழ்ச்சி பொங்க பேசினார்.
இதனையடுத்து, விழா சிறப்புற நடந்து முடிந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளப் பக்கத்தில், “சூழும் பகைதனைச் சுக்குநூறாக்கத் துணை நிற்கும் தோழமை இயக்கங்களின் வாழ்த்துகள், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் ஒலிக்க, கழகப் பவள விழா நடந்தேறியது! கொள்கைப் பகைவர் எங்கோ மறைய ஒன்றாகும் தோழமை இயக்கத்தினர் அனைவர்க்கும் நவில்கிறேன் நன்றியை என்றென்றும் இனமானம் காக்கும் உறுதியோடு!” என்று தெரிவித்தார்.
மேலும், “பவள விழாவைக் கண்டுவிட்டோம்; நூற்றாண்டைக் காண்பதற்குள் மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்!” என்றும் உறுதிபூண்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!