M K Stalin
அமெரிக்க அரசுமுறைப் பயணம் முடிந்து, சென்னை திரும்பினார் முதலமைச்சர்! - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டியாக நின்று, பல உலக முன்னணி நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்து அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
Google, Microsoft, Apple உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் எண்ணத்தை விதைத்தார் முதலமைச்சர்.
இந்நிலையில், வெற்றிகரமாக தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சிகாகோவில் இருந்து விமான மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை புறப்பட்டார்.
அவரை அமெரிக்க வாழ் தமிழர்கள் விமான நிலையம் வந்து உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!