M K Stalin
அமெரிக்க அரசுமுறைப் பயணம் முடிந்து, சென்னை திரும்பினார் முதலமைச்சர்! - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டியாக நின்று, பல உலக முன்னணி நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்து அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
Google, Microsoft, Apple உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் எண்ணத்தை விதைத்தார் முதலமைச்சர்.
இந்நிலையில், வெற்றிகரமாக தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சிகாகோவில் இருந்து விமான மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை புறப்பட்டார்.
அவரை அமெரிக்க வாழ் தமிழர்கள் விமான நிலையம் வந்து உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!