M K Stalin
கமிஷன் கிடைக்காததால் ரூ.5000 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அ.தி.மு.க அரசு - மு.க.ஸ்டாலின் சாடல்!
சென்னை மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கே.எஸ்.வெல்டிங் மணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் புவியூர் எட்வின் ஆகியோர் இல்லத்திருமண விழா மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணக்களான அஸ்வின் குமார், கண்மணியை வாழ்த்தினார். அதன் பிறகு மேடையில் பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலைத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
அதிமுக அரசின் குறிக்கோளாக கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் ஆகியவையே உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஏனெனில், அந்த சாலைப்பணிக்கு கமிஷன் வாங்க திட்டமிட்டிருக்கிறது அதிமுக. அது மறுக்கப்பட்டதாலேயே அந்த நிதி தற்போது திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது என சாடியுள்ளார். இந்த கொடுமைகள் அனைத்தும் 9 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இவற்றையும் தமிழக மக்களும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!