M K Stalin
தி.மு.க. தலைவராக ஓராண்டு நிறைவு: உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கழக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், " தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் தன்னை ஊக்கப்படுத்தியதற்காகவும், உற்சாகப்படுத்தியதற்காகவும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்றார்
மேலும் பேசிய அவர், மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறும், தேர்தலில் வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என தி.மு.க. எம்.பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் குறித்தும், இனிமேல் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !