M K Stalin
தி.மு.க. தலைவராக ஓராண்டு நிறைவு: உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கழக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், " தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் தன்னை ஊக்கப்படுத்தியதற்காகவும், உற்சாகப்படுத்தியதற்காகவும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்றார்
மேலும் பேசிய அவர், மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறும், தேர்தலில் வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என தி.மு.க. எம்.பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் குறித்தும், இனிமேல் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Also Read
-
திராவிட மாடல் அரசின் திட்டங்களை தொடர்ந்த விஜய் : மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு!
-
“குதிரை பேரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது” : த.வெ.க அரசு மீது பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
“சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்”... தனது கொள்கை முழக்கத்தை திமுக எப்போதும் கைவிடாது! - முரசொலி நெகிழ்ச்சி !
-
“வலிமையும் போர்க்குணமும் நமக்கே உரியதாகும்..” - தோழமைக் கட்சிகளுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி!
-
”பின்வாங்கிய தவெக அரசு.. அரசுப்பணியில் ராதன் பண்டிட்.. சட்டமன்றம் வரை எதிரொலித்த கடும் எதிர்ப்பு!”