M K Stalin
தி.மு.க. தலைவராக ஓராண்டு நிறைவு: உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கழக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், " தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் தன்னை ஊக்கப்படுத்தியதற்காகவும், உற்சாகப்படுத்தியதற்காகவும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்றார்
மேலும் பேசிய அவர், மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறும், தேர்தலில் வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என தி.மு.க. எம்.பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் குறித்தும், இனிமேல் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!